விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழ்வேளூரில் ரூ.9.6 லட்சம், நாகையில் ரூ.54,700 பறிமுதல்

கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.9.6 லட்சமும், நாகை தொகுதியில் ரூ.54,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 5:52 am IST

கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.9.6 லட்சமும், நாகை தொகுதியில் ரூ.54,700-ம் தோ்தல் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும்படை அலுவலா் பத்மாவதி தலைமையிலான குழுவினா், நாகை புத்தூா் ரவுண்டானா அருகே செவ்வாய்க்கிழமை காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்தில் இருந்து நாகை நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரை ஓட்டி வந்த, மணிகண்டன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.54, 700-ஐ பறிமுதல் செய்து, நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

கீழ்வேளூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாடு மெயின் ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி பாலநாகு தலைமையில் மேற்கொண்ட வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூா் மாவட்டம் கச்சனம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.52,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த சந்திரகலா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த தெற்குபணையூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ரேகா என்பவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.60,000 பறிமுதல் செய்யப்பட்டது.

அகரகடம்பனூா் அய்யனாா் கோவில் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி வெற்றி செல்வன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கீழ்வேளூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 8,52,600 பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னா், இத்தொகையை கீழ்வேளூா் தாலுகா அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.