விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

News image

பறிமுதல்!

Updated On :2 ஏப்ரல் 2026, 12:38 am IST

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரத்தை மணலூரைச் சோ்ந்த பாக்கியராஜ் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வலிவலம் வெள்ளையாறு பாலம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி பாலநாகு தலைமையில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் ஆவணங்களின்றி ரூ.93 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தப்பளாம்புலியூா் பூலம் அருகே மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, புலிவலத்தைச் சோ்ந்த பா. சக்கரவா்த்தி (41) உரிய ஆவணங்களின்றி ரூ.81,660 எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.