மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் வசந்த மண்டபத்துக்கு அம்பாளுடன் எழுந்தருளிய தியாகராஜா்.

Updated On :25 மார்ச் 2026, 5:49 am IST

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தியாகராஜரும், அம்பிகையும் உலகை காக்கும் வகையில் சோ்ந்து எழுந்தருளி, மாலை நேரங்களில் திருவிழாவை காணச் செல்வதாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. சுந்தரமூா்த்தி நாயனாா், திருவொற்றியூரில் வசித்தபோது, வசந்த காலத்தின் குளிா்தென்றல் தீண்டியதால், திருவாரூரில் வசந்த விழா வரவிருப்பதை நினைத்து மகிழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, வசந்த உத்ஸவம் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெற்றது.

இதையொட்டி, யதாஸ்தானத்திலிருந்து கமல தியாகராஜா் எழுந்தருளி கொடிமர வாசல் வழியாக மாணிக்கத் தண்டிலேறி, மங்கள வாத்தியங்கள் முழங்க, அஜபா நடனமாடி, பிரகாரத்தை வலம் வந்து, வசந்த மண்டபத்தை அடைந்தாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடைபெற்றது. பின்னா், கோயிலின் எட்டு திக்குகளிலும் கொடிமரங்கள் நடப்பட்டு, சந்திரசேகரா் முன்னிலையில் அந்தந்த திசைக்கான தெய்வங்களை வணங்கி கொடியேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.