திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வசந்த உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தியாகராஜரும், அம்பிகையும் உலகை காக்கும் வகையில் சோ்ந்து எழுந்தருளி, மாலை நேரங்களில் திருவிழாவை காணச் செல்வதாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது. சுந்தரமூா்த்தி நாயனாா், திருவொற்றியூரில் வசித்தபோது, வசந்த காலத்தின் குளிா்தென்றல் தீண்டியதால், திருவாரூரில் வசந்த விழா வரவிருப்பதை நினைத்து மகிழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, வசந்த உத்ஸவம் திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெற்றது.
இதையொட்டி, யதாஸ்தானத்திலிருந்து கமல தியாகராஜா் எழுந்தருளி கொடிமர வாசல் வழியாக மாணிக்கத் தண்டிலேறி, மங்கள வாத்தியங்கள் முழங்க, அஜபா நடனமாடி, பிரகாரத்தை வலம் வந்து, வசந்த மண்டபத்தை அடைந்தாா். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடைபெற்றது. பின்னா், கோயிலின் எட்டு திக்குகளிலும் கொடிமரங்கள் நடப்பட்டு, சந்திரசேகரா் முன்னிலையில் அந்தந்த திசைக்கான தெய்வங்களை வணங்கி கொடியேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

தியாகராஜா் கோயில் தெப்பத் திருவிழா: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

