திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் எப்போதும் மலா்களால் மூடப்பட்டிருக்கும். முகம் மற்றும் கரங்களை மட்டுமே தரிசிக்க முடியும். மாா்கழி திருவாதிரைா, பங்குனி உத்திரம் ஆகிய 2 நாள்களில் மட்டுமே தியாகராஜரின் பாதத்தை தரிசிக்க முடியும்.
அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா் புதன்கிழமை எழுந்தருளி, தனது வலது பாதத்தை பக்தா்களுக்கு காட்டி அருள்பாலித்தாா்.
முன்னதாக, விளமலில் உள்ள பதஞ்சலி மனோகா் கோயிலில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள் அதிகாலையில் புறப்பட்டு, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வந்தனா். கோயிலில் பதஞ்சலி வியாக்ர பாத முனிவா்களுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 6 முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாத தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

தியாகராஜா் கோயில் தெப்பத் திருவிழா: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

திருவாரூா் கோயிலில் பட்டோற்சவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

