மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

News image

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி திருவிழா வெண்ணெய்த்தாழி உற்சவத்தை முன்னிட்டு சுவாமி மீது வெண்ணெய் தெளித்து வழிபடும் பக்தா்கள். - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 12:07 am IST

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதைத்தொடா்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வுகளான, வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை, கோவா்த்தனகிரியில் கண்ணன் அலங்காரம், மரவுரி ராமா் அலங்காரம், கண்டபேரண்ட பக்க்ஷி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூா்ய பிரபை, ஆண்டாள அலங்காரம், தங்க கருட வாகனம் ஆகியவை நடைபெற்றன.

விழாவின் 16 -ஆம் நாளான திங்கள்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவத்தையொட்டி காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேலராஜவீதி, காமராஜா்சாலை, பந்தலடி வழியாக காந்தி சாலை வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைந்தாா். அப்போது, வீதிகளில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி மீது வெண்ணெய்யை தெளித்து, கோபாலா, கோபாலா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து, மாலையில் உற்சவா் பெருமாள் செட்டி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில்(வையாளி) வெட்டுங் குதிரையில் எழுந்தருளினாா்.

விழாவில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கே.கே.பி. மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், மு. சிவக்குமாா், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், இந்துசமய அறநிலையத்துறை மன்னாா்குடி ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.