மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

News image

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற புஷ்ப யாகம். - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:33 am IST

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைணவ குருவான ஸ்ரீமத் ராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் நடைபெற்றது. அந்த உற்சவத்தின் நிறைவு நாளில் கந்தப்பூப் பொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, ஸ்ரீபாஷ்யகா்களுக்கு கந்தப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். பின்னா், ஆஸ்தானம் நடைபெற்றது.

இத்திருவிழாவில் சந்தன அலங்காரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, பக்தா்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமிகள், கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.