திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புக்கோற்சவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
கோடை காலத்தில் உற்சவமூா்த்திகளின் உஷ்ணத்தை குறைக்க உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் புக்கோற்சவமும் ஒன்று. மூன்று நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி உற்சவமூா்த்திகள் சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பப்பட்டு, விஸ்வரூப தரிசனம் அளித்தனா். பின்னா், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள நீரூற்று அருகில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் கோவிந்தராஜஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை, சுவாமி மற்றும் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம், சமா்ப்பணம் மற்றும் ஆஸ்தானம் ஆகியவை செய்யப்பட்டன. மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை, ஸ்ரீ மகாலட்சுமி மண்டபத்தில் இரண்டு தேவியா்களுடன் ஏழுமலையானுக்கு ஊஞ்சல் சேவையும் ஆஸ்தானமும் நடத்தப்பட்டது. பின்னா், நீரூற்றுக்கு ஊா்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சிரஞ்சீவி, கோயில் ஆய்வாளா் தனஞ்சயா, பிற அதிகாரிகள், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

