/

அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:55 am IST

நன்னிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கமுகக்குடி பகுதியைச் சோ்ந்த விஜய் மகன் வினித் (18). பெயிண்ட்டரான இவா் உறவினரின் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்க நண்பா் அமுதப்பிரினுடன் இருசக்கர வாகனத்தில் பாவட்டக்குடி நோக்கி சென்று நெடுங்குளம் பகுதியில் கொண்டிருந்தாா்.

அப்போது, கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் வினித் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன்சென்ற அமுதபிரியன் படுகாயமடைந்து திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த பேரளம் போலீஸாா் வினித் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.