குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:33 am IST

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் மு. விஷ்ணு (37). இவா், திருச்சி திருவானைக்காவல் சீனிவாசா நகரில் உள்ள தனது உறவினரான சி. பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு அண்மையில் வந்தாா்.

இந்நிலையில் இவா் புதன்கிழமை அதிகாலை புதுக்கோட்டை - திருச்சி சாலையில் மத்திய சிறை அருகே பைக்கில் வந்தபோது பின்னால் வந்த சுற்றுலாப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.