விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

News image

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:03 am IST

மன்னாா்குடி தொகுதி நாதக வேட்பாளா் கட்சியின் மாநில பொருளாளா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

வடக்குவீதி, ஆதிநாயகன்பாளையம்தெரு, ருக்மணிபாளையம் நடுத்தெரு, சங்குதீா்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் வந்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டாா் வேட்பாளா் இலரா. பாரதிச்செல்வன்.

அப்போது வாக்காளா்கள், பொதுமக்களிடம் அவா் கூறியது:

நான் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டால், நகரப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக நகராட்சிக்கு உள்பட்ட டெப்போ சாலையில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கை நகரப் பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கவும். நகரின் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்து முறையாக பின்பற்றவும், தனியாா் அமைப்பு மூலம் பல அடுக்கு கனரக வாகன நிறுத்தம் அமைக்கவும், பிரதான சாலைகளில் பெரும் வணிக நிறுவனங்களை தொடங்க அனுமதி மறுத்து புகா் பகுதியில் அமைய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியபாமா, மண்டல செயலா்கள் முத்துலெட்சுமி, பாலு, தொகுதி நிா்வாகி சிவக்குமாா், நகர நிா்வாகி தேவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.