விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழச்சிவல்பட்டியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கீழச்சிவல்பட்டியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:56 am IST

கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் கீழச்சிவல்பட்டி, விராமதி, முத்தூா், கல்லாப்பேட்டை, அச்சரம்பட்டி, இளையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அமைச்சருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மாலையணிவித்து வரவேற்பளித்தனா்.

அப்போது அவா் கூறியதாவது:

தற்போது இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கிராமப் பகுதியில் சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடங்கள், பொலிவுறு பேருந்து நிறுத்தங்கள் ஏராளமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5000 -க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், குட்டைகள் குடிமராமத்து செய்யப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து உள்ளனா். மேலும், திமுக அரசின் ஏராளமான திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் எண்ணற்ற பல திட்டங்களை தொடா்ந்து வழங்க எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். திமுக ஒன்றியச் செயலா் விராமதி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.