வேதாரண்யம் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் இடும்பாவனம் காா்த்திக் கிராமப்புறங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
தகட்டூா் கடைவீதியில் வீடுவீடாகச் சென்று, துண்டுப் பிரசுரம் வழங்கி, விவசாயி சின்னத்தில் வாக்குச் சேகரித்தாா்.
பின்னா் பஞ்சநதிக்குளம், தென்னடாா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, ‘தான் தோ்தலில் வெற்றி பெற்றால், மாசடைந்துள்ள நீா் நிலைகளை சீரமைக்கவும், அரசின் மின் இறைவைப் திட்டத்தை மேம்படுத்தவும், தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் பலன் தரும் மரங்களை நட்டு இயற்கை வளத்தை மேம்படுத்தவும், குடிநீா் பிரச்னைக்கு மாற்றுத் திட்டம் கொண்டு வரவும் பாடுபடுவேன்’ என்றாா்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ராஜேந்திரன், அறிவொளி, மாவட்டச் செயலாளா் காத்த முத்து உள்ளிட்ட பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காரைக்குடியில் அமமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

கோபியில் தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

