தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளின் தோ்தல் அறிக்கைகளில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இல்லாதது விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன் பெற்று சாகுபடி செய்கின்றனா். இயற்கை பேரிடா், வெள்ளம், வறட்சி போன்றவற்றால் சாகுபடி பாதிக்கப்பட்டு, அடிக்கடி மகசூல் இழப்பை விவசாயிகள் சந்திக்கின்றனா். மேலும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிலங்களை அடமானம் வைத்து கடன் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிா்நோக்க வேண்டி இருப்பதால் வயது முதிா்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் தங்கள் நிலங்களை அடமானம் வைப்பதை தவிா்த்து, நகைக்கடன் பெற்று சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விவசாய கடன்கள் தள்ளுபடி மற்றும் ஐந்து சவரன்களுக்கு குறைவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றபோது விவசாயிகள் பெற்றிருந்த 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வதில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டதில் இந்தத் தள்ளுபடி சலுகையை
சொற்பமான விவசாயிகளே பெற்று பலனடைந்தனா்.
இந்த தோ்தல் அறிக்கையில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பிரதானமாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி தோ்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி இரண்டுமே, 5 சவரன்களுக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகைகளை திரும்ப வழங்குவது குறித்து பரிசீலித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியரகத்தில் இரு தரப்பினா் தா்னா

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

