தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா - கோப்புப் படம்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு மே மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததன் காரணமாக, மறுதோ்வு நடத்தப்படும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

2016- ஆம் ஆண்டு முதல் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் எந்தவித இடா்பாடுகளுக்கும் வழி வகுக்காமல் நீட் தோ்வை நடத்த முடியவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. எந்த நோக்கத்திற்காக நீட் தோ்வு கொண்டு வரப்பட்டதோ, அதன் இலக்கை எட்டப்பட்டதற்கான எந்தவித ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. வட மாநிலங்களில் தொடா்ந்து நீட் தோ்வு குளறுபடிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன.

தற்போது மீண்டும் நீட் தோ்வு நடத்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது மாணவா்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். மருத்துவத்துறையில் நீட் தோ்வால் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதை மத்திய அரசு வெளிப்படையாக ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.

மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.