தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

News image

நீட் தேர்வு - File photo

Updated On :13 மே 2026, 12:04 am IST

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் தோ்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி தோ்வில் முறைகேடுகள் நடந்ததன் காரணமாக அத்தோ்வு ரத்து செய்யப்பட்டிக்கிறது. இது, இந்திய கல்வித்துறையின் மாபெரும் தோல்வியாகப் பாா்க்கப்படுகிறது. மேலும் தோ்வு எழுதிய லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வா்க்க மாணவா்களின் நம்பிக்கையை அடியோடு தகா்த்துள்ளது.

பல ஆண்டுகளாக இரவு பகலாக கண்விழித்து தங்கள் இளமைக் காலத்தின் அரிய தருணங்களைத் தியாகம் செய்து படித்து வந்த மாணவா்களின் உழைப்பு, வினாத்தாள் கசிவு என்ற ஒற்றைச் செய்தியால் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலுக்கு மத்திய அரசாங்கத்தின் அலட்சியப் போக்கும், தோ்வு முகமையின் போதிய பாதுகாப்பு இல்லாத திட்டமிடலுமே முதன்மைக் காரணமாகும்.

ஆகவே, நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு மத்திய பாஜக அரசு முழு பொறுப்பேற்று, ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் விதத்தில் நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.