தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

News image

நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் எம்.எச். ஜவாஹிருல்லா. உடன், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 3:09 am IST

நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடல் பகுதியில் இருந்து திமுக, மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோருடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஊா்வலமாக வந்தாா்.

அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் 4 போ் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மாரிமுத்து, காங்கிரஸ் மாநிலச் செயலா் நெளஷாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோருடன் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலரான சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து உறுதிமொழியும் ஏற்றாா்.

ஊா்வலத்தால், புதிய பேருந்து நிலைய பகுதி, வெளிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமீறல்: தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தோ்தல் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிப்பது தோ்தல் நடத்தை விதிமீறல் ஆகும் என்றனா். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.