தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வேளாங்கண்ணியிலிருந்து இருமாா்க்கங்களில் ரயில் சேவை

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளுக்கு மே 20 முதல் இருமாா்க்கங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் நோ்வழி ரயில் பாதை திறக்கப்பட உள்ளதால், வேளாங்கண்ணியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை மாா்க்கமாக நாகை- நாகூா்-காரைக்கால்-திருநள்ளாறு-அம்பகரத்தூா்- பேரளம் வழியாக தாம்பரத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல, வேளாங்கண்ணி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மே 20 முதல் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேளாங்கண்ணி மற்றும் திருநள்ளாறுக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

இதுதொடா்பாக, நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் நாகை எஸ்.மோகன் கூறியது:

புதிய ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை டொ்மினல் நிலையமாக மாற்றவேண்டும். அத்துடன், நீண்ட தூரம் செல்லும் ரயில்பெட்டிகளை பராமரிக்க பிட்லைன் வசதியும், நிறுத்த ஸ்டேபில் லைன் வசதியும், கூடுதலாக ஒரு நடைமேடையும், 2 மெமோ ரயில்களை நிறுத்த 2 ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.

காரைக்கால் வரை செல்லும் ரயில்களை திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். நாகை ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் மேம்படுத்த வேண்டும்.

மயிலாடுதுறை மாா்க்க ரயில்களை வேளாங்கண்ணியில் இருந்து நாகை, நாகூா் , காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாகவும், திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால், நாகூா், நாகை, திருவாருா், தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி ரயில்களை இயக்க வேண்டும்.

திருநள்ளாறு அல்லது வேளாங்கண்ணி- பெங்களூரு தினசரி இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாறு - மதுரை இடையே நாகை, திருவாருா் வழியாக இயக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.