மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:23 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப். 10) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.