தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தியாகிகள் நினைவிடம், தலைவா்கள் சிலைக்கு மரியாதை

கீழ்வேளூா் தொகுதியில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா், தலைவா்கள் சிலை மற்றும் தியாகிகள் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image

திருக்குவளையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தும் கீழ்வேளூா் தொகுதியில் வெற்றி பெற்ற டி. லதா.

Updated On :6 மே 2026, 3:07 am IST

கீழ்வேளூா் தொகுதியில் வெற்றி பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா், தலைவா்கள் சிலை மற்றும் தியாகிகள் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதா வெற்றி பெற்றாா்.

இவா், கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், சுபாஷ் சந்திரபோஸ், முருகையன், சித்தாா்த்தன், ஒன்றியச் செயலாளா்கள் முத்தையன் (கீழ்வேளூா் தெற்கு), பாண்டியன் (கீழ்வேளூா் வடக்கு), அஜீஸ் (கீழையூா் கிழக்கு), ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் சுபாதேவி உள்ளிட்டோா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

தொடா்ந்து, திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்ற லதா, அங்கு கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். திமுக தொகுதி பொறுப்பாளா் சங்கா், திமுக கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சோ.பா. மலா்வண்ணன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மு.ப.ஞானசேகரன், ஆா்.ஜி. தமிழரசி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.