தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வலிவலத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

வலிவலத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

News image

சிறப்பு மலா் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:26 am IST

திருக்குவளை அருகே வலிவலத்தில் அமைந்துள்ள இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு பஞ்ச மூா்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

வலிவலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் இருதய நோய் தீா்க்கும் பரிகார ஸ்தலமாக பக்தா்களால் போற்றப்படுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான கோச்செங்கட் சோழா் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா இந்தாண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட நிலையில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, பக்தா்கள் ஓம் நமசிவாய, ஹரஹர மகாதேவா என முழக்கமிட்டு வழிபட்டனா்.

இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வரும் ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே 1-ஆம் தேதி தெப்ப உற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.