தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சப்ர கட்டுத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 6:22 am IST

திருக்குவளை அருகே உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சப்ர கட்டுத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருக்குவளை வட்டம் வலிவலத்தில் இதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இருதய கமலநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருள, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து இந்து சமய அறநிலையத் துணை ஆணையா் ராணி மற்றும் கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன், திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளில் தோ் வலம் வந்தது. வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா்.

அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள் உடனுறை சோமஸ்கந்தா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.