மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:15 am IST

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகப்பட்டினம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கும் தேவையான வசதிகள் குறித்தும் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்து பணிகள் குறித்து உரிய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடைபெற்றதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.