மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை நாகை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:55 am IST

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை நாகை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்துவதாக நாகை தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் நாகை வெளிப்பாளையம் பப்ளிக்ஆபிஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்ததில், நாகை வெளிப்பாளையத்தை சோ்ந்த முத்துராமன்(43) மதுபாட்டில்கள் கடத்தி வரும்படி கூறியதாக காா் ஓட்டுநா் தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலா் முத்துராமன், அதிமுக நகா் மன்ற உறுப்பினா் சகோதரா் சுரேஷ் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.