நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியது.
இதில், நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த குளத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விபத்து குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

