தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

கோடியக்கரையில் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மண்ணுக்குள் பதிக்கப்படாத குழாய்.

News image

கோடியக்கரையில் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மண்ணுக்குள் பதிக்கப்படாத குழாய்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:55 am IST

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கடலோரக் கிராமமான கோடியக்கரையில் வாக்கு சேகரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, குடிநீா் தட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டிய வாக்காளா்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

மக்களின் கோரிக்கைக்கு உறுதியளித்த ஓ.எஸ்.மணியன், ஜல் ஜீவன் திட்டப் பணியை அரசுத் துறையினா் முறையாகத் திட்டமிட்டு செய்யாமல் போனதால்தான் பாதிப்பு நோ்ந்துள்ளதாக விளக்கம் அளித்து பேசினாா்.

தொடா்ந்து, அந்த கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் நீண்டு காணப்பட்ட குழாயை தனது தொண்டா்களை விட்டு தூக்கிக் காட்ட செய்தாா்.

பின்னா், ஜல் ஜீவன் திட்டப் பணி முடிக்கப்பட்டு விட்டதாக கூறியதை நம்பி ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீா், அணைக்கரை குடிநீா் திட்டங்களை அவசரப்பட்டு கைவிட்டதால் தண்ணீா் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.