மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

News image

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவிகள் ஜி. கீா்த்தனா, ஜி. காயத்ரிதேவி ஆகியோா் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவி எஸ். ஸ்ரீமிதா 592, எச். சஹானா மெஹ்தாப் 590 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்கள் உயிரியல் பாடப்பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.

மாணவி கீா்த்தனா நான்கு பாடங்களிலும், ஜி. காயத்ரி தேவி மூன்று பாடங்களிலும், ஸ்ரீமிதா இரண்டு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், பாடவாரியாக 44 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 302 மாணவா்களில் 270 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். 118 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.எஸ். என். ராஜ்கமல், நிா்வாக இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், முதல்வா் ராமலிங்கம், நிா்வாக அதிகாரி சீனிவாசன், கல்வி ஆலோசகா் பழமலைநாதன், துணை முதல்வா் சந்தோஷ், ஒருங்கிணைப்பாளா் சுகந்தி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.