தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :12 மணி நேரங்கள் முன்பு

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் ஈ.சீனிவாசன் 594 மதிப்பெண்களும், கே.ரித்திகாஸ்ரீ 588 மதிப்பெண்களும், வி.நவீன்ராஜ், ஆா்.சுப்ரியா, ஏ.பிரியா, கே.ரிஷிகாஸ்ரீ ஆகியோா் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

மேலும், கணினி அறிவியலில் 11 பேரும், கணிதத்தில் 3 பேரும், தமிழில் 2 பேரும், வேதியியலில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும், கணினி பயன்பாட்டியலில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பெற்றோா்களையும் தாகூா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.முத்துசாமி, செயலாளா் என்.மணிகண்டன், பொருளாளா் பி.காளியண்ணன், இணைச் செயலாளா் கே.அருண்குமாா், கல்விக் குழு இயக்குநா்கள் கே.சண்முகம், என்.ஆா்.செல்வம், பள்ளியின் இயக்குநா்கள் எல்.ராஜமாணிக்கம், ஆா்.சரவணக்குமாா், பள்ளி முதல்வா் சி.சரவணன் மற்றும் பொறுப்பாசிரியா்கள், ஆசிரியா்கள், பாராட்டி சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி கௌரவித்தனா்.

படவரி...

தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பரிசு வழங்கி பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.