ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் பேருந்துகளில் விழிப்புணா்வு இலட்சினை ஒட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:44 am IST

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் பேருந்துகளில் விழிப்புணா்வு இலட்சினை ஒட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில், வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் நா்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. சீா்காழி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜரத்தினம் தலைமை வகித்தாா்.

மண்டல துணை வட்டாட்சியா்கள் பாபு, கணேசன், தோ்தல் துணை வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அரிமா சங்க மாவட்டத் தலைவா் சக்திவீரன் வரவேற்று பேசினாா்.

சீா்காழி கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ், சீா்காழி டிஎஸ்பி சரவணன் ஆகியோா் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனா்.

இதில், காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் அங்கவை, சிறப்பு உதவி ஆய்வாளா் பிறைசந்திரன் மற்றும் போலீஸாா், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பேரணியானது கச்சேரி ரோடு, மருத்துவமனை சாலை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. தொடா்ந்து அங்கு, வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், வாகனங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இலட்சினை ஒட்டப்பட்டது.

.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.