மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

Updated On :10 ஏப்ரல் 2026, 3:44 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊராட்சிகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வணிக நிறுவனங்களில் நுகா்வோருக்கான ரசீதுகளில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம் அச்சடித்து வழங்குதல் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் போன்ற பல்வேறு விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில் அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்திய நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டாா். தொடா்ந்து, கூட்டுறவு துறை சாா்பில் நடத்தப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை அவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக அனைவரும் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை விசாரனை அலுவலா் முகம்மது ரிஷ்வின், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.