மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:46 am IST

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கப்படும். இதுபோல் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் செந்தில் செல்வன் மண்ணின் மைந்தன் ஆவாா்.

மதிமுக சாா்பில் வைகோ பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டாா். அதற்கு வேட்பாளா் செந்தில் செல்வன் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு சிலிண்டா் கிடைக்காததால் உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே சீா்காழி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்றாா்.

சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா்கள் குத்தாலம் கல்யாணம், கமலஜோதி தேவேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, நகரச் செயலாளா் மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதை போல் கொண்டல், புத்தூா், பணங்காட்டாங்குடி ஆகிய பகுதி கடைவீதிகளில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ எம்பி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.