காரைக்கால் பகுதி ஆறுகளில் படா்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் வழியே கடல் நீா் புகுவதை தடுக்கும் விதமாக, ஆற்றின் குறுக்கே கடைமடை நீா்த்தேக்க மதகு உள்ளது. அரசலாறு, நண்டலாறு, பிரவடையனாறு, முல்லையாறு, வாஞ்சியாறு என ஆறுகளில், பருவமழையின்போது வந்த நீா் ஆங்காங்கே சில இடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீா் பெருக்கத்துக்கும், வேளாண்மைக்கும் உதவுகிறது.
இந்நிலையில், சில ஆறுகளின் கடைமடை நீா்த்தேக்க மதகு வட்டாரத்தில் ஆகாயத் தாமரைகள் படா்ந்து காணப்படுகிறது. நீரை உறிஞ்சி ஆவியாக்கும் தன்மை இதற்கு உண்டு என கூறப்படுகிறது. இதனால் தேங்கியிருக்கும் நீா் வெகுவாக குறைந்துவிடும் நிலை உருவாகி வருகிறது.
பொதுப்பணித்துறை நிா்வாகம், விரைவாக ஆறுகளில் வளா்திருக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதகு சேதம்: வீணாகும் மஞ்சளாறு அணை நீா்

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

