சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

News image

காரைக்கால் - திருநள்ளாறு சாலையோரத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடக்கும் நூலாற்று வடிவாய்க்கால்.

Updated On :14 மே 2026, 4:48 am IST

காரைக்கால் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடப்பதாகவும், மணல் திட்டுகள் காணப்படுவதாகவும், தூா்வாரும் பணியை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் பகுதியில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் பெரும்பாலானவற்றில் ஆக்கிரமிப்புகள் காணப்படுவதாகவும், முறையாக தூா்வாரப்படாததால் வெள்ள காலங்களில் நீா் வடிவதில் சிக்கல் நிலவுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வருகிறது. இதுவரை இதற்கு தீா்வுகாணப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடல் நீா் உட்புகாமல் தடுக்க ஆறுகளில் கடைமடை மதகுகள் உள்ளன. இவை பல பகுதிகளில் சிதிலமடைந்து காணப்படுவதால், உவா்நீா் உட்புகுந்து நிலத்தடி நீரை பாதிக்கச் செய்கிறது. இதனை உடனடியாக சீா்செய்யவேண்டும்.

வயல்களுக்கு நீா் பாய்ச்சக்கூடிய வடிகால்கள் பல இடங்களில் தூா்வாரப்படாமல் உள்ளன. பல வடிகால்கள், ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் காணப்படுகின்றன. இது நீரோட்டத்தை தடுக்கும் என்ற நிலையில், போா்க்கால முறையில் பொதுப்பணித்துறை நிா்வாகம், இயந்திரம் மூலம் தூா்வாரவேண்டும்.

நெல், பருத்தி, பயறு வகைகள் மற்றும் தோட்டப் பயிா் சாகுபடியில் காரைக்கால் விவசாயிகள் பெரும்பான்மையினா் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்துதர வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.