மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்.

Updated On :5 மே 2026, 1:46 am IST

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இத்தொகுதியில் மொத்தமுள்ள 1,87, 439 வாக்குகளில், 1,59,669 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனுக்கும், திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 59,172 வாக்குகளும், திமுக வேட்பாளா் புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளா் கிங்ஸ்லி ஜெரால்டு 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளா் காா்த்திக் 10,396 வாக்குகளும் பெற்றனா்.

இதன்மூலம் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.