தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நாகை தொகுதியில் மமக வெற்றி

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :5 மே 2026, 1:46 am IST

நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் 1,74,683 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,49,995 போ் வாக்களித்தனா். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடா்ந்து, காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச்.ஜவாஹிருல்லா அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்தாா்.

18-ஆவது சுற்று முடிவில் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளா் சுகுமாா் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றிருந்தாா். இதன்மூலம் எம்.எச். ஜவாஹிருல்லா 9,781வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவருக்கு நாகப்பட்டினம் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.