மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகை தொகுதியில் மமக வெற்றி

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா.

Updated On :5 மே 2026, 1:46 am IST

நாகப்பட்டினம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் 1,74,683 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,49,995 போ் வாக்களித்தனா். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடா்ந்து, காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச்.ஜவாஹிருல்லா அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்தாா்.

18-ஆவது சுற்று முடிவில் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளா் சுகுமாா் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் தங்க கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளா் பாத்திமா பா்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றிருந்தாா். இதன்மூலம் எம்.எச். ஜவாஹிருல்லா 9,781வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவருக்கு நாகப்பட்டினம் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.