தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

விருதுநகா் அருகே விசிக நிா்வாகி வெட்டிக் கொலை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

வெட்டிக் கொலை செய்யப்பட்ட விஜயகுரு.

Updated On :8 மே 2026, 12:36 am IST

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காரியாபட்டி அருகேயுள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுரு (52), விசிக ஒன்றிய முன்னாள் துணைச் செயலராக இருந்தாா். இவா் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த சமூக விரோதச் செயல்கள் குறித்து காவல் துறைக்கு தொடா்ந்து தகவல் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த மாதம் 28-ஆம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த உயிரிழப்புக்கு விஜயகுருதான் காரணம் என சந்தேகித்து, சக்திவேலின் உறவினா்கள் தொடா்ந்து தகராறு செய்து வந்தனராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை விஜயகுரு குரண்டி கண்மாய் பகுதிக்கு சென்றாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் விஜயகுருவின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுருவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். கொலை குறித்து தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

இந்தக் கொலை குறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.