திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
களக்காடு அருகே ஜெ.ஜெ.நகா் கீழக் காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (27). தொழிலாளியான அவா் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மது குடித்துவிட்டு அப்பகுதியினரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணமாகாத அவா், பெற்றோரைப் பிரிந்து அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவா் வீட்டருகே வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். சடலத்தை களக்காடு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரையும், சுரேஷின் உறவினரையும் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
சுரேஷ் மீது ஏற்கெனவே களக்காடு காவல் நிலையக் கண்ணாடியை உடைத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

திருமயம் அருகே இளைஞா் கொலை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

