மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

திருப்பரங்குன்றம் அருகே இரு வேறு இடங்களில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

News image

காவல் துறை வாகனம் - கோப்புப்படம்

Updated On :4 மே 2026, 3:33 am IST

திருப்பரங்குன்றம் அருகே இரு வேறு இடங்களில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலையின் நடுவே இறந்த நிலையில் இளைஞரின் உடல் இருந்தது. இது குறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார், இறந்து கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி சோதனையிட்டனர். முதலில் விபத்தாக இருக்கலாம் என போலீஸார் கருதிய நிலையில், இளைஞரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் மதன் (28) என்பது தெரிய வந்தது.

இதேபோல, நிலையூர் - சம்பக்குளம் சாலையில் வண்ணபாறை அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு திருமங்கலம் ஏ.எஸ்.பி. அன்சுல் நாகர் தலைமையிலான போலீஸார் சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடலில் பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையிலும், அடையாளம் காண முடியாத வகையில் இறந்தவரின் முகம் சிதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. மேலும், இறந்தவர்கள் குறித்து போலீஸôர் அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது, யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

இதையடுத்து, மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்தவரின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.