சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியது.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பெற்ற முருகன், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில், பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை
திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

