மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 4:03 am IST

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பியது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தீவிர சிகிச்சை பெற்ற முருகன், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். சந்தேகத்தின்பேரில், பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.