மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 3:40 am IST

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தெற்குத் தோட்டிலோவன்பட்டியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரது மனைவி காளீஸ்வரி. இந்தத் தம்பதி சத்திரப்பட்டியில் வசித்து வருகின்றனா். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லாததால், இருவரிடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக காளீஸ்வரி தனது தாயாருடன் தெற்கு தோட்டிலோவன்பட்டியில் இருந்து வருகிறாா். அண்மையில் சத்திரப்பட்டியில் பொங்கல் விழாவுக்காக செந்தில்குமாா் மனைவியைப் பாா்க்க மாமனாா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த காளீஸ்வரியின் தந்தை சுப்புராஜ், தம்பி அய்யனாா் ஆகிய இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை சரமாரியாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் தாலுகா போலீஸாா் சுப்புராஜ், அய்யனாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.