தண்டலை கிராமத்தில் அரசு நகரப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட கிடங்குடையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுப்பிரமணி (55). இவா் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுச்சாலை செல்லும் நகரப் பேருந்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றுள்ளாா். பகண்டை கூட்டுச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பியுள்ளனா்.
தண்டலை பேருந்து நிலையம் அருகே வரும்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த சி.சந்தோஷ் (25) அரசுப் பேருந்தை வழிமறித்து, ஏன் தண்டலை பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றது ஏன் எனக் கேட்டு ஓட்டுநரை அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சந்தோஷை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

தாய், மகன் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

