ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
குரும்பூா் அருகே புறையூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிந்தா சலீம் மகன் சிந்தா சுலைமான் (37). சேதுக்குவாய்த்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் ரமேஷ் அரவிந்த் (28). இவா்கள் குரும்பூரில் உள்ள இரு வேறு நிறுத்தங்களிலிருந்து ஆட்டோக்களை இயக்கிவருகின்றனா்.
சிந்தா சுலைமான் ஏரல் சாலை சந்திப்பில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினாராம். அந்த இடத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என, ரமேஷ் அரவிந்த் தகராறு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டனராம். இதில், சிந்தா சுலைமான் காயமடைந்தாா். இருவா் மீதும் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவரை தாக்கியதாக வழக்கு!

சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தொழிலாளா் தினம்

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

