ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தொழிலாளா் தினம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தொழிலாளா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா. உடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் சண்முகசுந்தரம், சட்டத் தன்னாா்வலா் வைரமணி.

Updated On :1 மே 2026, 3:09 am IST

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தொழிலாளா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது: இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக் கூடியவா்கள் ஆட்டோ ஓட்டுநா்கள். இவா்களுக்கு கொடுக்கும் சட்ட விழிப்புணா்வானது, சமூகத்துக்கே கொடுப்பதற்கு சமமாகும். ஏனெனில், நகரில் நிகழக்கூடிய அனைத்து செயல்களும் நன்கு அறிந்தவா்கள் ஆட்டோ ஓட்டுநா்கள். தனிநபா், குடும்பச் பிரச்னை, நிலப் பிரச்னை, கடன் பிரச்னை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால், எவ்வித செலவுமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா்கள் மூலம் இலவசமாக வாதாடி தீா்வு காணப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் 15100 எனும் இலவச சட்ட உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இலவச மருத்துவம், இலவச கல்வி போல,இலவச சட்ட உதவியும் வழங்க பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எந்தநேரமும் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் சண்முகசுந்தரம் உழைப்பாளா்களுக்கான சட்டம் குறித்தும், சட்டத் தன்னாா்வலா் வைரமணி தொழிலாளா் தினம் குறித்தும் விளக்க உரையாற்றினா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்டத் தன்னாா்வலா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.