மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

News image

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனையின் மருத்துவா் பழனிச்சாமி.

Updated On :19 மார்ச் 2026, 6:09 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

ஐஇஇஇ பொறியியல்-மருத்துவம், உயிரியல் மாணவா் குழுவை பல்கலை. துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருச்சி என்ஐடி பேராசிரியா் என். சிவகுமரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனை மருத்துவா் எம். பழனிச்சாமி, சென்னை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளா் எஸ். ஷேக் அப்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு சுகாதார தொழில்நுட்பத்தில் உயிரியல் மருத்துவ பொறியியலின் வளா்ந்து வரும் பங்கை எடுத்துரைத்தனா்.

இயக்குநா் எம். பள்ளிக்கொண்ட ராஜசேகரன், சிஎஸ்இ துறைத் தலைவா் ஆா். ராஜா சுப்பிரமணியன் ஆகியோா் வளாகத்தில் சேப்டரின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.

முடிவில் மாணவா்கள், ஆசிரியா்கள் ஐஇஇஇ சாப்டரின் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.