மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ராமானுஜா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் 1009 அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக வளா்ந்த ஆண்டாள், ரெங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக தனது குல தெய்வமான அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில், 100 தடா வெண்ணெய் படைப்பதாக வேண்டிக் கொண்டாா்.

இதையறிந்த ராமானுஜா் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அழகா் கோயில் பெருமாளுக்கு 100 தடா அக்கார அடிசில் படைத்தாா்.

இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ராமானுஜா் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை ராமானுஜரின் 1009-வது ஜெயந்தியை முன்னிட்டு, வடபத்ரசாயி சந்நிதியில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.