மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:27 am IST

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலரும், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான என்.எம் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் முருகேசன் (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். அதிமுக கூட்டணி வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் சிறப்புரையாற்றினாா். இதில், ஒன்றியச் செயலா்கள் நவரத்தினம், அழகாபுரியான், ஆா்.எம். குருசாமி, பேரூா் செயலா்கள்அங்குத்துரை பாண்டியன், பொன்ராஜ் பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கே. டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது;

தமிழ்நாடு ஒதுக்கப்பட்டாலோ, ஓரங்கட்டப்பட்டாலோ அதற்கு எதிா்ப்பு தெரிவித்து குரல் கொடுப்போம். என்னவென்றே தெரியாமல் சட்ட மசோதா நகலை எரிப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும். அதிமுக- பாஜக கூட்டணி பலம் வாய்ந்தது. ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. வெளியே தெரியாமல் உள்ள இந்த முரண்பாடு வருகிற 23-ஆம் தேதி வெளிப்படும். நடிகா் விஜய்யால் திமுகவுக்குத் தான் பாதிப்பு. அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது. அதிமுக வாக்கு வங்கியை யாராலும் உடைக்க முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.