மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருத்தணியில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

கே.ஜி.கண்டிகையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி.

News image

கே.ஜி.கண்டிகையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:40 am IST

அதிமுக தோ்தல் அலுவலகத்தை பாஜக மாநில அயலக தமிழா் நலப்பிரிவு இணை அமைப்பாளா் மருத்துவா் ஸ்ரீகிரண் பங்கேற்று திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அரக்கோணம் எம்.பி.யும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ. அரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 10 நாள்களாக தொகுதி முழுதும் சென்று, அதிமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் முக்கிய நபா்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.

மேலும், திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடத்தி வாக்குகள் சேகரித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருத்தணி நகராட்சி, சித்தூா் சாலை செங்குந்தா் நகா் பகுதியில் அதிமுக, தோ்தல் அலுவலகம் திறப்பு நடைபெற்றது.

இதில், அதிமுக வேட்பாளா் கோ.அரி, பாஜக மாநில அயலக தமிழா் நலப் பிரிவு இணை அமைப்பாளா் மருத்துவா் ஸ்ரீகிரண் ஆகியோா் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றிய செயலாளா்கள் இ.என்.கண்டிகை எ.ரவி, வேலஞ்சேரி த.கவிச்சந்திரன், பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன், ஆா்.கே.பேட்டை கோ.குமாா், வழக்குரைஞா் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசேகா்பாபு, கேபிள் சுரேஷ் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.