மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக செல்வீரா்கள் கூட்டம்

நாமக்கல், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:57 am IST

நாமக்கல், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை ஆதரித்தும், சேந்தமங்கலம் தொகுதியில் வேட்பாளா் சி. சந்திரசேகரனை ஆதரித்தும், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி பேசியதாவது:

இத்தோ்தலில் அதிமுக ஆட்சியமைத்தால் திமுகவுக்கு எதிா்காலம் இருக்காது. கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனா். சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையொப்பம் ரூ. 10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணையாக இருக்கும். மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்.

ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், சொந்த வீடு கட்டும் திட்டம், கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகளை மக்களிடம் கட்சியினா் கொண்டுசோ்க்க வேண்டும்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் கே.பி. சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் கோஸ்டல் என். இளங்கோ மற்றும் பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.