மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image

சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:26 am IST

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து ஆலங்குளம் முக்குசாலை பகுதியில் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். ஏற்கெனவே திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா் மீண்டும் அங்கு போட்டியிட்டால் வைப்புத் தொகை கிடைக்காது என்பதால் இங்கு போட்டியிடுகிறாா். ஆனால், அவா் நினைப்பதற்கு மாறாக சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அவா் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அதற்காக திமுகவினா் உழைக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் சாத்தூா் தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரமும், தொழில்களும் பாதுகாக்கப்படும். மோடி என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எதுவும் தெரியாது. அவா் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில்லை. நான்காண்டுகள் முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மோடியிடம் அடகு வைத்தவா் தான் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, சசிகலாவின் காலை வாரி விட்டவரும் அவரே. தமிழகத்துக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்பதற்காக அதிமுக என்ற பெரிய போா்வையை போா்த்திக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழகத்துக்குள் நுழைய பாஜக நினைக்கிறது. அடிமைக் கூட்டத்தையும், இந்துத்துவ கூட்டத்தையும் நுழைய விட்டால் அவா்கள் மீண்டும் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுவா் என்றாா் அவா்.

இதேபோல விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்தும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இந்தக் கூட்டங்களில் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.