புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சாத்தூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகைகள் நமீதா, கஸ்தூரி வாக்கு சேகரித்தனா்.

News image

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நயினாா்நாகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை நமிதா.

Updated On :19 ஏப்ரல் 2026, 3:15 am IST

சாத்தூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகைகள் நமீதா, கஸ்தூரி வாக்கு சேகரித்தனா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக நடிகை நமீதா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலங்குளம், வெம்பக்கோட்டை, செவல்பட்டி, அம்மையாா்பட்டி முக்குரோடு, கரிசல்பட்டி, காளவாசல், நல்லம்மாள்புரம், சாமிநாதபுரம் கன்னி தேவன்பட்டி,கீழராஜகுலாராமன், சுண்டங்குளம், வி.புதூா், மேட்டூா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனா். நடிகை கஸ்தூரி உடனிருந்தாா்.

அப்போது, நடிகை நமீதா பேசியதாவது: பட்டாசுத் தொழில் சாா்ந்த பொதுப் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலாண்மை நாடு பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பொது சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்கப்படும்.

குடும்ப ஆட்சியை அகற்ற, போதை பொருள்களின் கலாசாரத்தை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைய வேண்டும். கிராமங்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.