சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த மாா்ச் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னா், தினசரி இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பிகை வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கடந்த 4-ஆம் தேதி மாலை நடைபெற்ற ஏழாம் நாள் திருவிழாவின் போது, சீா்வரிசை பின்தொடர புஷ்ப பல்லக்கில் சயன கோலத்தில் அம்பிகை வீதி உலா வந்தாா். 5 -ஆம் தேதி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா். 6-ஆம் தேதி நடைபெற்ற கயா்குத்து திருவிழாவின் போது, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

